கல்முனை பாலிஹாவின் புதிய அதிபராக பழைய மாணவி நஸ்மியா நியமனம்!

நூருல் ஹுதா உமர்கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) புதிய அதிபராக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டு இன்று (25) தனது கடமைகளை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி […]

உறுதி மொழி கொடுத்து எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும்! காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்! திகா MP

பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு பெருந்தோட்ட காணிகளை குத்தகைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மலையக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக உறுதி மொழிகள் வழங்கப்படுவதும்,பின்னர் ஏமாற்றப்படுவதும் வழமை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “மலையகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்ததும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழமை. ஆனால் மலையக […]

நுவரெலியாவில் விசேட தேவையுடையவர்களுக்கான சுயதொழில் உதவி.

( நூரளை பி.எஸ். மணியம்) நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடைய முப்பது பேர் தமது சுயதொழிலை மேம்படுத்த கோரியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உபகரணங்கள் இன்று (25) வெள்ளிக்கிழமை  வழங்கப்பட்டது. நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலகங்களில் வசிக்கும் விசேட தேவையுடைய சுயதொழில் செய்பவர்களுக்கான சுயதொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் […]

மயிலத்தமடு,மாதவனை பிரதேசங்களில் அத்துமீறல்களை தடுக்க நிரந்தர சோதனை சாவடிகள் தேவை! சந்திரகாந்தன் MP

திட்டமிட்ட சில கும்பல்களினால் மட்டக்களப்பு  மாவட்டத்தில் தோற்றுவிக்கப்படும் சில அத்துமீறல்கள், குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் இன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான  சிவ.சந்திரகாந்தன்¶ அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்த மடு மாதவனை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற அத்துமீறல்கள் […]

புகழ்பூத்த பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 16 வது சிராத்த தினம் இன்று

(வாஸ் கூஞ்ஞ) தினபதி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளின் சிரேஷ்ட பத்திரிகையாளரும் பிரபல அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியும் சிரேஷ்ட சட்டத்தரனியும் என்.கே.பிள்ளை அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியுமானவரும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவரும் இக்கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளருமான அமரர் கண.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் விண்ணக வாழ்வின் 16 வது நினைவேந்தல் 26.08.2023 சனிக்கிழமையாகும். இவர் ஒரு பத்திரிகையாளராக சட்டத்தத்தரனியாக பன்முகப் பரிமானங்களை வெளிப்படுத்தியவர். புத்திரிகைத் துறையில் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் வழிகாட்டலிலே தன்னை […]

பசறை பத்தாம் கட்டை மதுபானசாலைக்கு முற்றுக்கட்டை! வடிவேல் சுரேஷ் MP யின் போராட்டம் வெற்றி!

பசறை பத்தாம் கட்டையில் புதிதாக திறக்கப்படவிருந்த மதுபான சாலை வடிவேல் சுரேஷின்  தொடர் அழுத்தத்தினால் இடைநிறுத்தப்பட்டது இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த  வடிவேல் சுரேஷ் MP மலையகப் பெருந்தோட்டங்களை குறிவைத்து அதிகளவிலான மதுபான சாலைகள் திறக்கப்படுகின்றது பணம் தின்னும் முதலைகளின் சூழ்ச்சி மலையக சமூகத்திற்கு அச்சுறுதலாகவும் சமூக சீர்கேட்டிற்கும் வித்திடுகின்றது. மலையகப் பெருந்தோட்டங்களில் பாடசாலை நூலகம் மலசலக்கூடம் நீர் வசதி என பல அபிவிருத்தி வேலை திட்டங்களை அத்தியாவசியமாக இருந்த போதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாது மதுபான […]

சரத்வீரசேகர MP யின் பேச்சை கண்டித்து வடமாகண சட்டத்தரணிகள் போராட்டம்!!

சட்டத்தரணி ப.நாகேந்திரன்  பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிவானை அச்சுறுத்தி அவமதித்த சரத் வீரசேகரவின் அசிங்கமான நடத்தையை கண்டிக்கின்ற வகையில்  சட்டத்தரணிகள்  போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர். சரத் ​​வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று 25/03/2023 காலை வட மாகாணத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்   வவுனியா சட்டத்தரணிகள் சங்கம்  பாராளுமன்றஉறுப்பினர் சரத்வீரசேகர பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் […]

கஜேந்திர குமார் பொன்னம்பலம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் !

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களின் கொழும்பு வீட்டை சுற்றிவளைத்து சிலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அன்மையில் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில கொழும்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்து இருந்தார . அதன் முதற்கட்டமாக இன்று பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திர குமார் போன்னம்பலத்தின் கொழும்பு வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு தற்போது அங்கு கூடி இருக்கின்றனர். மேலும் […]

மட்டக்களப்பில் முன்னுதாரனமாக செயற்பட்ட இந்து ஆலயங்கள்!

  மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்று (24) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த கால சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததனால் பரவலாக பின்தங்கிய பகுதிகளில் கைவிடப்பட்டும் கவனிப்பாரற்று அழிவுற்ற நிலையிலும் பல சிறிய ஆலயங்கள் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டு அவற்றின் தொன்மைகள் அழிந்து போகா வண்ணம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாட்டிற்குரிய […]

வவுனியா இரட்டை கொலை! சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்ல தடை, வங்கி கணக்கு பரிசோதனை!

வவுனியா, இரட்டை கொலை சந்தேக நபர்கள் மற்றும் தேடப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) அனுமதி வழங்கியதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச் சீட்டுக்களையும் முடக்க வவுனியா நீதிமன்றம் இன்று (24.08) உத்தரவிட்டது வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இரண்டைக் கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய […]