மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட  கடற்தொழிலாளர்களுக்கு 45000 ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவி

( வாஸ் கூஞ்ஞ) மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு  வாழ்வாதார உதவிகளாக ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா 45000 ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மெசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் தமது வாழ்வாதார தொழிலாக சலவை மற்றும் சலவைத் தூள் சவர்க்காரம் மற்றும் தொற்றுநீக்கி போன்ற 06 உற்பத்தி பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சினை சிறப்பாக பெற்ற பயிற்சியாளர்களுக்கு மெசிடோ நிறுவனத்தின் தலைமையில் இலங்கை கைத்தொழில் அதிகார சபையின் சான்றிதழ் […]

மின் கம்பியில் மோதியது ரதம் – இருவர் பலி – மூவர் பாதிப்பு! நமுனுகலையில் சோகம்

ராமு தனராஜா பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின் இணைப்பு கம்பியில் மோதியதால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இவ் அனர்த்தத்தில் 27 மற்றும் 37 வயதுடைய   உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மரணித்த இருவரும் பூட்டாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என நமுனுகுல […]

ஜமாலியா கிராம மக்களின் போராட்டம் பேச்சுவார்த்தையின் பின் முடிவு! ( Full Story)

அஸ்ரப் அலீ திருகோணமலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குகள் கொண்டுவரப்பட்டது திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று மாலை அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் இந்நிலையில் அப்பிரதேசத்துக்கு ராணுவத்தினரும் […]

வட மாகண சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்த அமெரிக்க தூதுவர்! தேசிய பிரச்சினை உட்பட பல விடயங்கள் ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் வட மாகாணத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாடினார். இன்று ( 23/08/2023 நடைப்பெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய பிரச்சனை உள்நாட்டு அரசியல் நடப்பு நிலவரங்கள் குறித்தும் இதில்  கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்த கூட்டம் தொடர்பாக அதில் கலந்து கொண்ட சட்டத்தரணி ப.நாகேந்திரன் கருத்து தெரிவிக்கையில் மலையகம் மற்றும் அவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து எனது கருத்தினை தூதுவர் கேட்டறிந்தார் மலையகத்தைப் […]

பொலிஸ் காவலில் இளைஞர் மரணம்! ஜமாலியா கிராமத்தில் தீ மூட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்!

அஸ்ரப் அலீ திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபா் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்துள்ளார் இதனையடுத்து ஜமாலியா பிரதேசவாசிகள் வீதியில் இறங்கி, பொலிசாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர் இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் தற்போதைக்கு கடும் பதற்றம் நிலவுகின்றது பொலிசாரும், இராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பில் சற்று முன்னர் திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது .”மிக விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த […]

போதைப்பொருள் கடத்தலை தடுங்கள்! பூரண ஆதரவு சஜித் அறிவிப்பு

போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு,9/11 ஆணைக்குழுவால் Department of Homeland Security என்ற புதிய பிரிவு நிறுவப்பட்டதாகவும்,30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாடாக தற்போது போதைப்பொருள் பயங்கரவாத கடத்தலுக்கு பலியாகியுள்ளதாகவும்,பாடசாலை கல்வித் துறையிலும் படையெடுத்துள்ளதாகவும்,ஆதிக்கம் செலுத்துவிட்டதாகவும்,எனவே, போதைப்பொருள் கடத்தலை அழிப்பது தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்க […]

பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயம்!

  ராமு தனராஜா பதுளை பசறை பிரதான வீதியில் இரு வேறு விபத்துகளில் ஐவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.   இன்று மாலை பெய்த கடும் மழையின் போது பதுளை பசறை பிரதான வீதியில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்களில் ஐவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பசறை வீதி 5 ம் கட்டை பகுதியில் பேருந்து ஒன்றும் மகிழூந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மகிழூந்தில் பயணித்த […]

வெருகலில் குளவி கொட்டுக்கு இளம் குடும்பஸ்தர் மரணம்!

  வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. வெருகல் – மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் என்ற 30 வயதான இளம் குடும்பஸ்தரே குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்பில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறையில் மாவடிச்சேனையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அயல்வீட்டாருக்கு பனை ஓலை வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறியுள்ளார். அவ்வேளை பனை மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து […]

நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகள் மேம்படுத்தப்படவுள்ளன

  நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம் – இந்திய உயர்ஸ்தானிகர் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த போது தெரிவிப்பு உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் […]

நுவரெலியாவில் இலவச மூக்கு கண்ணாடி வழங்கல்

   (  நூரளை பி. எஸ். மணியம்) நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின்” ஏற்பாட்டில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ ஆலய பிரதான மண்டபத்தில் இன்று (23) புதன்கிழமை நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட  கண் பார்வை குறைந்த வரிய குடுபத்தை சேர்ந்த மக்களுக்க மூக்கு கண்ணாடிகள் இலவசமாக  வழங்கி வைக்கப்பட்டன. இவ் வைபவத்தின் போது” நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின்” தலைவி திருமதி ஸ்ரீ சிவராஜன் கருத்து தெரிவிக்கையில்’ நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் […]