மேர்வின் சில்வா தமிழர்களுக்கு எதிராக பேச காரணம் தமிழ் கூட்டமைப்பே – காங்கிரஸ் தலைவர் மஜித்!!

வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் அமைச்ச‌ர் மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசும் நிலையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌மாகாண‌த்தில் பௌத்த‌ ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு சேத‌ம் ஏற்ப‌டுத்தினால் அங்குள்ளோரின் த‌லைக‌ளை க‌ள‌னிக்கு கொண்டு வ‌ருவேன் என‌ மேர்வின் கூறிய‌து மிக‌ க‌டுமையான‌ த‌விர்க்க‌ வேண்டிய‌ வார்த்தையாக‌ இருப்பினும் அவ‌ர‌து ச‌மூக‌ அக்க‌றை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவ‌ரை ஆக்கிய‌ த‌மிழ் […]

அம்பாறை மாவட்டம் இனம் மதம் பேதமின்றி அபிவிருத்தி செய்யப்படும்- சஜித்

நலீர் அகமட் நாட்டின் எதிர்கால ஜனாதிபதியாக சம்மாந்துறை,கல்முனை, அம்பாறை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அம்பாறை மாவட்டமும் எந்த மதத்தையும் இனத்தையும் ஓரங்கட்டாமல் முழு மாவட்டத்தையும் ஒன்றிணைத்து சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ளவதாகவும், மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சம்மாந்துறை,கல்முனை,அம்பாறை மற்றும் பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளும் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களினால் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரச பாடசாலைகளுக்கு பேருந்து வழங்கும் […]

மேர்வின் தலையில் சுகமில்லை! அவரின் கருத்து பாரதூரமானது!மனோ

“தமிழரின் தலை பற்றி பேசும” மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி   என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கிறார். தமிழரின் தலையை கொய்து வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்த குடும்பத்துடனேயே  மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டு தரகு பணம் பெரும் […]

யாழ்ப்பாண கற்கோவளம் ராணுவ முகாமை அகற்ற மக்கள் எதிர்ப்பு

‘செய்தி புயல்” அஸ்ரப் அலீ யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றை அகற்றும் தீர்மானம் தொடர்பில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர் யாழ்ப்பாணம், கற்கோவளம் அருகே அமைந்துள்ள சிங்க ரெஜிமண்ட் படைப்பிரிவின் முகாம் ஒன்றை எதிர்வரும் நாட்களில் அகற்றிக் கொள்ள படைத்தரப்பு தீர்மானித்துள்ளது இந்நிலையில் குறித்த செய்தி அறிந்து பிரதேசவாசிகள் முகாம் நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ராணுவத்தினர் இருக்கும் வரையே தாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து […]

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்த ஹரீஸ் எம்.பி!!

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனை கிளை உறுப்பினர்களுக்கும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களுடனான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு கல்முனை பள்ளி வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. கல்முனை மக்கள் எதிர்நோக்கும் சமூக, சமய, கலாச்சார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றியும் கல்முனையின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது […]

தேசபந்து தென்னகோனின் பேஸ்புக் பக்கத்தை ஊடுருவிய கறுப்பு ஆடு யாரு?

” செய்தி புயல்” அஸ்ரப் அலீ மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளது அது குறித்து அவர் தனது பேஸ்புக் ஊடாக அறிவித்துள்ளார் மேலும் ஊடுருவப்பட்டுள்ள தனது பேஸ்புக் பக்கத்தில் வௌியாகும் செய்திகளுக்கு தான் பொறுப்பில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் ஒரு சமூகசீரழிவுக்கான திறப்பு விழாவா !! பசறை மக்களின் ஆதங்கம்! தீர்க்குமா அரசாங்கம்!

ராமு தனராஜா மலையகத்தில் ஏற்கனவே அளவுக்கு அதிகமாக மது சாலைகளால் மலையக சமூகம் திண்டாடுகிறது இந்த நேரத்தில் பதுளை பசறை 10ம் கட்டையில் புதிய மதுவகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஆயத்தப் பணிகள் நடக்கின்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மலையகம் 200 இல் ஏதாவது நல்லது நடக்காதா என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த நேரத்தில் மேலும் புதிதாக சாராயக் கடைகள் திறப்பதற்கான தேவைகள்தான் என்ன  இதனால் பெரும் புள்ளிகளுக்கே இலாபம். பதுளை பசறை பத்தாம் கட்டையில் திறக்கப்பட இருக்கும் […]

போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இலங்கையர்கள் கைது

அஸ்ரப் அலீ போலந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் நேற்று அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் சுமார் 160 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு போலந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டுள்ளனர் பெலாரஸ் எல்லை வழியாகவே இவர்கள் போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டதாக போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையர்கள் மாத்திரமன்றி எகிப்து, சோமாலியா, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது

மருதமடு ஆலயப் பகுதியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் திடீர் மரணம்!.

( வாஸ் கூஞ்ஞ) 14.08.2023 மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதத்தின் பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பும் மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீர் மரணம். இச்சம்பவம் ஞாயிறு (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆவணி பெருவிழா கடந்த 06.08.2023 அன்று ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இப்பெருவிழா செவ்வாய்கிழமை 15.08.2023 அன்று காலை பெருவிழாத் திருப்பலியுடன் நிறைவுபெறுகின்றது. இப்பெருவிழா கத்தோலிக்க நிகழ்வுகளை நேரலையாகத் தொகுத்து அனுப்பும் […]

பம்பலப்பிட்டி பஸ் விபத்தில் எட்டுப் பேர் காயம்

  பம்பலப்பிட்டி சந்தி அருகில் இடம்பெற்ற லொறி-பஸ் விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட எட்டுப் ​பேர் காயமடைந்துள்ளனர்.   போக்குவரத்து விதிகளை மீறி ஓடிய கதிர்காமத்துக்கான தனியார் பேரூந்து ஒன்றும், போக்குவரத்து சிக்னல் பிரகாரம் முன்னால் நகர்ந்த லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது காயமடைந்தவர்கள் தற்போது தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.