லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும்?

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது. அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை […]

நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது அவசியம்

ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும்  என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம  தெரிவித்துள்ளார். அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்தார். ”டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே […]

மலையக வீடமைப்பு திட்டம் – விசேட கலந்துரையாடல்

மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பங்குபற்றலோடு நடைபெற்றது. அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.தீப்தி, திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் வஹாப்தீன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, அமைச்சின் அதிகாரிகள் […]

‘அஸ்வெசும’ – பயனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பபடாது

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் […]

டெங்கு:விசேட சுத்திகரிப்பு- சுகாதார இராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு நுளம்பு குடம்பிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். டெங்கு நோய் பரவலைக் […]

சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது முதன்மை நோக்கம் 

அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  வழிகாட்டலின் ஊடாக பெருந்தோட்ட மனித வள  அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுவரெலிய மாவட்டத்தில் 7758 பேர் உள்ளடங்கிய  2288  வீடுகளுக்கு 1021 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்வேளை திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது. […]

சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்

(க.கிஷாந்தன்) பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். திடீரென பொகவந்தலாவ நகரில் களமிறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார். கைது செய்யப்பட்ட இளைஞர் தரப்பில் உள்ள நியாயத்தை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த ஜீவன் தொண்டமான், […]

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய அதிகாரம் இல்லை

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே தலைமை நீதிபதி இதனை அறிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 1974-இல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த […]

பொருளாதார மீட்சிக்கு UN ஒத்துழைப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐ.நா பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார். நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள […]

மேற்குலக நாடுகளின் தாக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ரஷ்ய தூதுவர்

சர்வதேச சமூகத்தில் எழும் சில சிக்கலான சூழ்நிலைகளில் இலங்கை மேற்கொண்ட மத்தியஸ்த நடைமுறையை ரஷ்ய அரசாங்கம்  பாராட்டுவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தூதுவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் மேற்குலக நாடுகளின் தாக்கம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.