கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை மூலம் செய்ய முடியாது

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை அல்லது பொதுவான பொறிமுறையின் மூலம் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “தற்போதைய உலகம் எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமீபத்திய நிலைமையை IMF விளக்குகிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை பாரிஸ் உச்சி மாநாட்டுடன் இணைந்து சந்தித்தார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க அரசின் வலுவான முயற்சிகளால் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக நிதி நிதி தொடர்ந்து உறுதியளிக்கும் என்றும் கூறினார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். ஜூன் 22 மற்றும் […]

நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் நடைபெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு சபை அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர் ஆணையாளர், பெருந்தோட்ட மனித […]

எதிர்வரும் நாட்களில் விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் நளின்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேபோல் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்பும் அந்த சலுகைகளின் நலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […]

நல்லிணக்க முயற்சிகள் தொடரும்: ஜனாதிபதி

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]

முதலாம் ஆண்டுக்கான புதிய பாடம்

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜப்பானிய சந்தையை இலக்காகக் […]

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம்…

இசை நிகழ்ச்சிகளுக்கான இரவு 10 மணி வரையிலான காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத ஸ்தலங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நியாயமான தூரத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம்

விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று […]

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளது என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் […]

காட்டெருமையை வேட்டையாடிய இருவர் கைது

தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி பிரிவிலேயே காட்டெருமை வேட்டையாடப்பட்டு, இறைச்சி பொதியிடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்துள்ளது. சந்தேக நபர்கள் கைதாகும்போது அவர்களிடம் 54 கிலோ இறைச்சி இருந்துள்ளது. ஏனையவை தோட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இறைச்சி மருத்து பரிசோதனைக்காக சுகாதார கால்நடை வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் போடைஸ் […]