2024 – சாதகமான ஆண்டு – நிதி இராஜாங்க அமைச்சர்

IMF ஆதரவின்றி நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்குவதாக யாராவது கூறினால் அவர்களிடம் தீர்வு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டின் இறுதியில் எதிர்மறை 3 ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர்  நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அதனை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும் […]

மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி…

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதானதேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் ஊடாக வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ‘ஸ்திரமான […]

டெங்கு ஒழிப்புக்காக பரந்த வேலைத்திட்டம்

மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், (பல்கலைக்கழகங்கள்/பிரிவேனாக்கள்) ஆகிய இடங்களின் சோதனையிடப்படவுள்ளது. செவ்வாய்கிழமைகளில் தொழிற்சாலைகளும் புதன் கிழமைகளில் வேலைத்தளங்களிலும், வியாழக்கிழமைகளில் ஏனைய தனியார் நிறுவனங்களிலும், வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களிலும், சனி கிழமைகளில் வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அண்மித்த பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களிலும் சோதனையிடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் […]

தொழில் ஆணையாளரிடம மலையக பிரதநிதிகள் விடுத்த கோரிக்கை

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந் தோட்ட நிறுவனங்களான ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம் , எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழிலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார் மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் தொழில் ஆணையாளரை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளனர். ஊடகங்களுக்கு வடிவேல் சுரேஷ் கீழ்க்கண்டவாறு கருத்துரைத்தார் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களினால் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவை வழங்கப்படாமையினாலும் […]

450 கிராம் பாண் இறத்தால் விலை குறைப்பு

450 கிராம் பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று (20) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி, பெட்ரிசியா சந்திப்பு

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளார். பொதுநலவாய அமைப்பில் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் செயலாளர் நாயகமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் உத்திகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.  

வருடத்தில் இதுவரை 255 மனித கொலைகள்

இந்த வருடத்தில் இதுவரை 255 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, 2022ஆம் ஆண்டில் 559 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை, கடந்த வருடத்தில் ஏறக்குறைய 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நாட்டில் துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் களத்தில் […]

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இந்த நாட்டில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயம், எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்பிற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படாத வகையில் மற்றும் […]

இலங்கையில் இந்திய நீர் மூழ்கிக் கப்பல் (Photos

இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS Vagir நீர்மூழ்கிக் கப்பல் இன்று(19) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய குறித்த கப்பலுக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 67.5 மீட்டர் நீளமுடைய நீர்மூழ்கிக் கப்பலொன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 60 ஊழியர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பலின் கட்டளைத் தளபதியாக கமாண்டர் S.திவாகர் செயற்படுகின்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள யோகா நிகழ்வொன்றில் இலங்கை மற்றும் இந்திய கடற்படை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த […]

டயகம புனித அந்தோனியார் ஆலய திருவிழா

டயகம தூய அந்தோனியார் ஆலய வருடார்ந்த திருவிழா ஒரே குடும்பம்,ஒரு அவை,ஒரே மறைப்பணி எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது. கண்டி மறைமாவட்ட குருமுதல்வர் அதிவணக்கத்துக்குறிய எல்வின் பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருவிழாவின் போது டயகம பகுதியில் காணப்படுகின்ற ஏராளமான பொதுமக்கள் இன,மத வேறுபாடின்றி கலந்து சிறப்பித்தனர். மேலும் புனித அந்தோனியாரின் திருவுருவ சிலை டயகம நகர் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்க்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவு பெற்றது.