சம்பள நிர்ணய சபைக்கு செல்லவுள்ளோம் – CWC

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (12) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட […]

யானை தாக்கி இளம் பெண் பலி

கொஸ்லாந்த, உட தியலும பிரதேசத்தை பார்வையிட சென்ற யுவதி யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். உயிரிழந்த யுவதி மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய சுற்றுச்சூழல் சட்டம்…

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது எனவும் […]

எல்பின் ஆற்றுநீரில் இரசாயன கலவை நுவரெலியா வாழ் மக்களுக்கு ஆபத்து

எல்பின் ஆற்றுநீர் இரசாயன கலவைக்கு உட்பட்டிருப்பதானது நுவரெலியா மாவட்டத்துக்கும் அங்குவாழ் மக்களுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மிக விரைவாகவே இவ்விடயத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நுவரெலியா மாவட்ட அரச அதிபரை வலியுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்ட அரச அதிபரிடம்  எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் கடிதத்தின் பிரதிகளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நுவரெலியா மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் […]

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்ளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட […]

ஆசியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் துணைபோகாது: – ஜனாதிபதி

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு தசாப்தங்களில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை முன்னேற்றுவதற்கு அணிசேரா கொள்கை, பஞ்சசீலம் மற்றும் ஆசியக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் […]

தலசீமியா பற்றிய எச்சரிக்கை

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் பேராசிரியர் கலாநிதி டொக்டர் சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மறு அறிவித்தல் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்று(11) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. […]

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை, என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மாறாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான கோதுமை மா கையிருப்பு காணப்படுகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை 08.30 மணியளவில் 8.80N மற்றும் 88.90Eக்கு அருகில் மையம் கொண்டது. இது இன்று […]