மத்திய வங்கி சட்டமூலம் மீதான தீர்மானம்

மத்திய வங்கி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று, (09)  கருத்து வெளியிடும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை கூறினார்.

அமைச்சரவை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை

மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு அமைச்சரவை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. மே 9 போராட்டத்தின் ஒரு வருட பூர்த்திக்கான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஜனாதிபதியை சந்திக்கவுளள TNA…

வடக்கு – கிழக்கு நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

படைவீரர் நினைவு நிகழ்வு

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08) காலை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய படைவீரர் […]

லண்டன் விகாரையில் ஜனாதிபதி வழிபாடு

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின் பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வண.போகொட சீலவிமல நாயக்க தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவருடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் வண.போகொட சீலவிமல நாயக்க தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிகளை வழங்கினர். […]

விமானத்தில் என்ஜினில் இருந்து வெடித்த, தீப்பிழம்புகள்

பிரேசிலின் குறைந்த கட்டண விமானம், புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓடுபாதையில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததால், விமானம் பழுதடைந்தது. கடந்த 4 ஆம் திகதி அன்று ரியோ டி ஜெனிரோவில் உள்ள சாண்டோஸ் டுமோன்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு விமானம் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. அது புறப்படுவதற்கு சற்று முன், “தொழில்நுட்ப பிரச்சனை” காரணமாக என்ஜினில் இருந்து தீப்பிழம்புகள் வெடித்து, விமானம் நிறுத்தப்பட்டது என்று மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. […]

நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை […]

கடனை வாங்கி கடனை அடைப்பது தீர்வாகாது

எந்த தேர்தல் நடந்தாலும் சஜித் அணி வெல்வது உறுதி என பாராளுமனற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார். கடனை வாங்கி கடனை அடைப்பது தீர்வாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார். கடந்த 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு மே 6-ம் […]

கேரளா படகு விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மலப்புரத்தின் தானூர் பகுதியில் நேற்று (ஞாயிறு) இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சுற்றுலா படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. […]