இப்படித்தான் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும்

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை 3,638 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் […]

விவசாயிகளுக்கு போதுமான உரம்…

விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா மற்றும் இதர உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய நிதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த கலந்துரையாடல் தென்கொரியாவில் நடைபெற்றது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அலி சப்ரி ஆகியோர் தென் கொரியாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56வது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும், விசேட பொதி

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எதிர்காலத்தில் விசேட பொதி ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்சல்களை பார்வையிட 3000 பொது சுகாதார பரிசோதகர்கள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெறும் தன்சல்களை பார்வையிட 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் உபுல் ரோஹன , தன்சல் ஒன்றை நடத்துவதற்கு  கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தேசிய வெசாக் வாரம்

தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி […]

நுவரெலியாவில் கட்டுமானத்திற்கு வரையறையாம்

நுவரெலியா மாவட்டத்தில் 04 மாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் […]

‘பேச்சின்படி நடந்து காட்டுங்கள்’ – ரணிலுக்கு மனோ வலியுறுத்து

“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”,   “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகிறீர்கள். இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள். “வோக் யுவர் […]