கப்பல் தொடர்ந்தும் தாமதம்

இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது. காரைக்காலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்  நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.