ஜீவன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய உறுதி

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் கருதி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்டன் பிரதேசத்தில் “ஊடக மையம்” ஒன்றை அமைத்துக் கொடுக்கப்படும் என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு கொட்டகலை ஹில்கூல் விருதகத்தின் சனிக்கிழமை (17) இடம்பெற்றது. நுவரெலியா ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தலைமையில் அமைச்சருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் கையளிக்கப்பட்டது. சுமார் 40 பேர் கலந்து கொண்ட இச் சந்திப்பில் அமைச்சர் […]