நிரந்தரமான அரசியல் தீர்வே அவசியம்

கச்சைத்தீவு ஒரு பிரச்சினையல்ல மாறாக இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகத்திற்கு சென்ற இந்திய பிரதமரிடம் தமிழக முதல்வர் கச்சைத்தீவு மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்திருத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சி.சிறிதரன்; இதனை தெரிவித்துள்ளார்.