அமைச்சரவை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை

மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு அமைச்சரவை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. மே 9 போராட்டத்தின் ஒரு வருட பூர்த்திக்கான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.