ஆப்கான் கிரிக்கெட் பிரபலத்திற்கு வந்த சோதனை

ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையிலான இடையிலான ஒருநாள் தொடர் நாளை ஹம்பாந்தோட்டையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.