இம்ரான் கான் விளக்கமறியலில்

கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் 8 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் நேற்று கைது செய்யப்படடமை குறிப்பிடதக்கது.

முகத்தை மூடி நீதிமன்றம் சென்ற இம்ரான் கான்

பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்த மூன்று வழக்குகளில் ஆஜராவதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜரானார். இம்ரான் கான் சிறப்பு பாதுகாப்புடன் தலையை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தது சிறப்பு. இம்ரான் கான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார், ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு இப்படி உடையணிந்து நீதிமன்றம் வந்தார். இம்ரான் கானுக்கு எதிரான தீ வைப்பு, காவல்துறையினருக்கு எதிரான மூன்று வன்முறை  […]