சந்திப்பு

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவுக்கு செயலமர்வு ஒன்றில் கலந்துக் கொள்ள சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதன்போது இரு நாடுகளுசக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.