கயானாவில் பாடசாலை ஒன்றில் தீ

கயானாவில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கயானாவில் உள்ள மஹிதா உயர்தர பாடசாலையில் உள்ள தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று (22) நள்ளிரவு தீ பரவியதாகவும் சீரற்ற காலநிலை காரணமாக தீயை கட்டுப்படுத்துவதற்கு முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் கயானா நாட்டுக்கு 03 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.