நட்டமடையும் அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு

நட்டத்தில் இயங்கும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை இனி மேல் திறைசேரியால் பாதுகாக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார்.