நலப் பயனாளிகளுக்கு அறிவிப்பு

நலப் பலன்கள் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என சமூக நலப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் 100 வீதமான தெரிவுக்குழு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டார். பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என பி. விஜயரத்ன மேலும் தெரிவித்தார்.