நீதி வேண்டும்- கர்தினால்

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமை தொடர்பில் கடந்த அரசாங்கங்களுக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 272 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் வரலாற்றில் இருண்ட நாளாகக் குறிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான நினைவேந்தல் நிகழழ்ச்சியில் உரையாற்றிய பேராயர் இதனை கூறியுள்ளார்.