பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரின் லாகுரில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள் பிரதமருக்கு, சட்டவிரோதமாக பரிசுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்யுமாறு நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரிகள் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.