பாடசாலை விடுமுறை முடிந்தது..

அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும்  ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. பாடசாலை நேர அட்டவணையின்படி, விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.