மலாவியில் அவசர நிலை பிரகடனம்

பிரெடி சூராவளி காரணமாக மலாவி நாட்டில் இதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சூராவளி காரணமாக 134 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. குறிப்பாக அங்குள்ள பிளாண்டயர் என்ற பொருளாதார நகரம் சூராவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.