ஸ்கொட்லண்ட் வருகிறார்

பொதுநலவாய நாகளின் பொதுச் செயலாளர் பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் 5 நாள் பயணமாக இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கு இணங்க 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் அவர் கலந்துக்கொள்ளவுள்ளதாக பொதுநலவாய நாடுகள் காரியாலயம் தெரிவித்துள்ளது. பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த மாதம் முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளார். தனது விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.