மண்சரிவு முன் எச்சரிக்கை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இது இன்று (21) காலை 8 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை செல்லுபடியாகும். இதன்படி, காலி மாவட்டம், யக்கலமுல்ல, பத்தேகம, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

 நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) 2 மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

பூனாகலை – கபரகலை தோட்டத்தில் மண்சரிவு

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை தோட்டத்தில் நேற்று இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. அங்குள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட  மண்சரிவில்,இதுவரையில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்தும் தேடுதல் பணிகள் தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார். இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்திய […]