ஒருபக்கம் பொருட்களின் விலையேற்றம் மறுபக்கம் மின்சார கட்டண உயர்வு

நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் மக்களின் கழுத்தை இருக்கி பிடித்து நெருக்குவதாக மலையக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது விலைவாசி மலைபோல உயர்ந்துவிட்டது.செலவுக்கேற்ற வருமானம் இன்மையால் மக்கள் நாளாந்தம் தங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்றி உணவு முறையை கட்டுப்படுத்தி விட்டனர்.குறிப்பாக மலையக மக்கள் சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். ஒரு நாள் நிம்மதியாக சாப்பிட்டு உறங்கிய காலத்தை மறந்தவர்களாகி விட்டனர்.அதேபோல பாடசாலைக்கு செல்லும் […]