உலகக் கிண்ண ரக்பி போட்டி

உலகக் கிண்ண ரக்பி போட்டியின் சம்பியனுக்கு வழங்கப்படும் கிண்ணம் காட்சிக்காக இலங்கைக்கு கொண்டு  வரப்பட்டுள்ளது. எனினும், இலங்கை ரக்பி சம்ளேனத்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை. உலகக் கிண்ண ரக்பி கிண்ணம் பாரிஸில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் அதனை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டு சபையின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். அதன்படி இலங்கை விளையாட்டு ரசிகர்கள் ரக்பி உலகக் கிண்ணத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.