JVP சந்தேகம்

கடந்த வருடம் மத்திய வங்கி ஆளுனர் கடனை திருப்பிச் செலுத்துவதில்லை என்ற தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலுடன் பிணைத்துள்ளதாக JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய வளங்களை விற்பது சாபமா? பொறியா என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மாநாடு நேற்று (07) பிற்பகல் மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.