நண்பர்கள் ஒன்றாக கடைசி பயணம்

பதுளையில் வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரு மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (03) பிற்பகல் இடம்பெறவுள்ளன. விபத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் பதுளை மற்றும் ஹாலி – எலவிலுள்ள அவர்களது வீடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. வாகன பேரணியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.