சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் நேற்று (7) முதல் அடைமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.

தொடர்ந்தும் மழை காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (8) அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழையுடன் பனி மற்றும் குளிரான காலநிலை காணப்படுவதனால் தொழிலாளர்கள் தொழிலிலுக்கு ​செல்வதில்லை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்தனர்.

மழையுடன் ஹட்டன், கொழும்பு பிரதான வீதியிலும் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை,கடவலை, தியகல,வட்டவளை,ஹட்டன் உள்ளிட்ட பகுதியிலும், ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியிலும் குடாகம,கொட்டகலை,தலவாக்கலை,சென்கிளையா,லிந்துலை,நானுஓயா, ரதல்ல ஆகிய பிரதேசங்களில் பனி மூட்டம் காணப்படுவதனால், இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு செல்வதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம். என போக்குவரத்து பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாணத்திலும் ஆங்காங்கே மழையுடன் கூடிய மலை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *