அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் மிக அதிகமான காரமுள்ள சிப்சை உட்கொண்ட உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்ஸ் சாப்பிடும் சவால் என்று சிப்ஸ் நிறுவனம் ஒன்று சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளது.

அதைப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து மிக அதிக காரம் நிறைந்த சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்ற 14 வயது சிறுவன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த சிப்ஸை சாப்பிட்டு விட்டு பள்ளி சென்றதாக கூறப்படும் அந்த சிறுவனுக்கு பள்ளியில் வயிறு வலி ஏற்பட்டதால் செவிலியர் ஒருவர் முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

வீடு திரும்பிய பிறகு சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஹாரிஸ் ஒலாபா மரணத்துக்கு அதிக காரம் கொண்ட சிப்சே காரணம் என்று தாயார் புகார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிப்ஸ் விற்பனையை ஆன்லைன் நிறுவனங்கள் திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *