ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திக்குள் நுழைந்த 24 வயது இளைஞன் ஒருவர் இரண்டு மாணவிகள் உட்பட மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்த பொலிஸார் இளைஞரை சம்பவ இடத்திலேயே வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *