இலங்கையில் எரிபொருளின் விலை இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது.
இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.