தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. இலங்கை கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர் கதையாகிவருகிறது. இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்திவருகிறது.

மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த மீனவர்களின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது.

மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *