ஒட்டோவாவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்து மூன்று வயது சிறுவன் விழுந்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சிறுவன் 18 ஆம் மாடியில் இருந்து கீழே விழுந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *