(தலைமன்னார்  நிருபர் வாஸ் கூஞ்ஞ)

சட்டவிரோதமான முறையில் மன்னார் தீவிலிருந்து மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதிக்கு ஒரு வாகனத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்ட குஞ்சு கடலட்டைகள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வியாழக்கிழமை (03) மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது வியாழக்கிழமை (03) மன்னார் தீவிலிருந்து மன்னார் பெரும்நிலப்பரப்பு பகுதியான நாச்சிக்குடாப் பகுதிக்கு ஒரு வாகனத்தின் மூலம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உயிருடனான குஞ்சு கடலட்டைகள் கொண்டு செல்லப்பட்டபோது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் பாலத்தடியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சோதனையின்போதே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் கொண்டு செல்லப்பட்டமையினாலேயே இவைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ஈடுபட்ட வாகனமும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடலைட்டைகள் மற்றும் வாகனம் மற்றும் இரு சந்தேக நபர்களையும் இராணுவத்தினர் மன்னார் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட உயிருடனான கடலட்டைகள் மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினால் உடன் ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் ஏனைய சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் சட்ட நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு மன்னார் கடற்தொழில் திணைக்களம் நடவடிக்கை  மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *