கடந்த ஞாயிறன்று (17) கொழும்பு-07 இல் அமைந்துள்ள புதிய நகரசபை மண்டபத்தில் பாடகர்களான கலைக்கமல்- பாசிலின் “தேனும் பாலும்” இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புதிய அலை கலை வட்டம் நடத்திய எவோட்ஸ்-2022 சர்வதேச கவிதைப் போட்டியில் முதல் பரிசை பெற்றுக்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த கவிஞர் பசுவூர்கோபிக்கு விருதும் சான்றிதலும் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் விருதினை வழங்கி வைப்பதையும் சிறப்பு அதிதி யான தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தெ.செந்தில்வேலவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பதையும், புதிய அலை கலை வட்ட ஸ்தாபகர் ராதாமேத்தா, தலைவர் ஷண்மு, பொருளாளர் ஓவியன் ஆகியோர் அருகில் நிற்பதையும் படங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *