கம்பஹா மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக விசேட குழுவொன்றை அனுப்ப சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட குழுவொன்றை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, நாட்டில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *