துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் மையம் இந் நிலநடுக்கம் 5.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களாகும்.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.