அருணாச்சல பிரதேசம் மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள பாங்கின் நகரில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.50 மணியளவில் பாங்கின் நகருக்கு வடக்கு வடமேற்கு திசையில் 221 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *