( நூரளை பி. எஸ். மணியம்)
மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியில் அதிரடி மாற்றம்.
மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி யில் மறுசீரமைப்பு ஹட்டன தலைமை காரியாலயத்தில் அக் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்  தலைமையில் நேற்று  (17) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இதன் போது புதிய நிர்வாக சபை மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கட்சியின் கவுன்சில் உறுப்பினர்களாக ஆர். இராஜாராம் , கண்மணி சிவனேசன், எம். பி. ஆனந்தன், தாளமுத்து சுதாகரன், க.சிவஞானம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும்  கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ் ணன் செயலாளர் நாயகமாக மீண்டும்  பேராசிரியர்  எஸ். விஜயசந்திரன், பிரதி தலைவராக முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், தேசிய அமைப்பாளராக ந.பாலமுரளி, நிதிச் செயலாளராக பி.கிருஸ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியிலும் பதவி மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன அந்தவகையில் தலைவராக கலாநிதி வேலுசாமி  இராதாகிருஸ்ணன்,  பதில் செயலாளராக புஸ்பா விஸ்வநாதன், நிதிச் செயலாளராக தாளமுத்து சுதாகரன்,  அமைப்புச் செயலாளராக எஸ். எஸ். ஜெயக்குமார்,பிரதி பொதுச் செயலாளராக க.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய், செயலாளராக கதிர்காமத்தம்பி சுரேன், இணைப்பாளராக கலைக்குமார் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மகளீர் அணி தலைவியாக சுவர்ணலதா இலங்கேஸ்வரன், செயலாளராக கிருஸ்ணவேணி,பிரதி தலைவியாக கலா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு பத்மநாதன் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இவ்வாறு புதிய உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு காலம் கட்சியில் காணப்பட்ட பிணக்குகள் தீர்க்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர் வரும் காலங்களில் மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி மக்களோடு மக்களாக கடந்த காலங்களில் இருந்ததை விட மேலும் ஒரு படி முன்னோக்கி செல்லும் எந்நேரமும் மக்களுக்காக மலையக மக்கள் முன்னணியின் கதவு திறந்திருக்குமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *