( வாஸ் கூஞ்ஞ)
போதைப் பொருளுடன் வைத்தியசாலை ஊழியர் இருவரை கைது செய்ய பொலிசார் முனைந்த வேளையில் பொலிசாரின் கையை கடித்து விட்டு ஒருவர் தப்பியோட்டம் ஒருவர் கைது செய்யப்பட்டார் தப்பியோடிய அம்புலன்ஸ் நபரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை (30) பிற்பகல்  மன்னாரில் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்
மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலனின் பணிப்புரை க்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து முருங்கன் வைத்தியசாலையில் கடமையாற்றும் நபர் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் நபர் ஒருவரும் போதைப் பொருள் விற்பனைக்காக 179 கிராம் போதைப் பொருள் கொண்டு சென்றுள்ளனர்.
இப் போதைப்பொருள் மாதிரிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இப் போதைப்பொருள் முருங்கன் பாடசாலைக்கு பின் புறமாக விளையாட்டு மைதானத்தில் வைத்து காண்பிக்கப்பட்ட நேரத்திலேயே பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்ய முனைந்துள்ளனர
இதன்போது இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ய முற்பட்டபோது பொலிசாரின் கையை கடித்து விட்டு ஒருவர் தப்பியோட்டம் மற்றையவர் கைது செய்யப்பட்டார்
இதில் வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் நபரே கைது செய்யப்பட்டார் முருங்கன் வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதியே தப்பியோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிசார் மன்னார் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப் படுத்தியதுடன் இவரை ஏழு நாட்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொலிசாரின் கையை கடித்து தப்பியோடிய சந்தேக நபரைத் தேடி பொலிசார் வலை வீசியுள்ளனர்
இதேவேளை கையில் கடி காயத்துக்கு உள்ளாகிய பொலிஸ் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *