முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மீது இன்று (03) காலை மத்துகம நகரில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம நகரிலுள்ள மரக்கறிக் கடையொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *