பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
பசறை மடூல்சீமை வீதியில் கிகிரிவத்தை மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை பசறையில் இருந்து எல்டப் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

வீதியின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்ததாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகன காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *