தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இன்று மற்றும் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஒவ்வொரு கலெக்டர்களும் தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *