ரொறன்ரோ நகரில் மக்கள் கடுமையான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவைச் சேர்ந்த பத்து வீதமான மக்கள் உணவு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ரொறன்ரோவில் உணவு வங்கிகளில் தங்கியிருப்போர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.
அண்மையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் வறுமை குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.