நூருல் ஹுதா உமர்
இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL) வருடத்திற்கான இளம் கண்டுபிடிப்பாளர்
(“Junior Inventor of the Year 2023) எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவன தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிறாக் கல்லூரி (தேசிய பாடசாலை) சார்பில் கலந்து கொண்ட முஹம்மட் அதீப் (உயர்தர கணித பிரிவு மாணவன்), பாடசாலைப் பிரிவில் பங்குபற்றி இறுதி சுற்று வரை சென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார். இம் மாணவனுக்கு பாடசாலை சார்பாகவும் பாடசாலை இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் சார்பாகவும் புத்தாக்குனர் கழகம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *