பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.

பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 28 வயதான அவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *