இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ தொ.கா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களுடன் இடம்பெற்றுள்ளது
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் தலைவர் சிவராமன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.
இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக திகழும் முக்கிய அமைப்பே இஇதுவாகும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.