அவுஸ்திரேலியாவிலும் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்தன.
இந்த நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவிலும் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் கூறுகையில், `டிக்-டாக் செயலியால் ஏற்படும் விளைவுகள் குறித்து உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.